பெரியார் சிலை மீது காலணி வீசியதால் பரபரப்பு

சென்னை: சென்னையில் பெரியார் சிலையின் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: சென்னையில் பெரியார் சிலையின் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் உள்ள அவரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர். சிலைக்கு அருகில் பெரியாரின் புகைப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், திடீரென தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி பெரியார் சிலை மீது வீசி எறிந்தார். பின்னர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவரை உடனடியாக போலீசார் பிடித்து கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். 

இதுபோன்ற செயல்களை ஆரம்ப கட்டத்தில் ஒடுக்கவேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், சிலையை அவமதித்தவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...