நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், இதனை சுற்றுலாப்பயணிகள் ரசித்துச் செல்கின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், இதனை சுற்றுலாப்பயணிகள் ரசித்துச் செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்த காரணத்தினாலும், தற்போது அவ்வப்போது கனமழை பெய்து வருவதாலும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பல்வேறு பகுதிகளில் புதிய அருவிகள் விழத்துவங்கியுள்ளன.
உதகையில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, குன்னூர் காட்டேரி மற்றும் லால்ஸ் நீர்வீழ்ச்சி, கோத்தகிரியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இதனைக்கான சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மேலும், சாலை ஓரங்களில் இயற்கையாக தோன்றியுள்ள புதிய அருவிகள் இவ்வழியாக பயணிப்போரை பரவசப்படவைத்துள்ளது.
இந்த அருவிகள் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும், பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காட்சி தருவது, இவ்வழியாக பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.