நீலகிரி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உதகையில் விசுவ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 100 விநாயகர் சிலைகள் முதற்கட்டமாக விசர்ஜனம் செய்யப்பட்டன.
நீலகிரி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உதகையில் விசுவ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 100 விநாயகர் சிலைகள் முதற்கட்டமாக விசர்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் ஏராளமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 3 நாள் வழிபாட்டிற்கு பிறகு இன்றும், நாளையும் என இருநாட்கள் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று முதற்கட்டமாக விசுவ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன நிகழ்ச்சி நடைபெற்றது.
100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பூங்கா சாலையில் இருந்து புறப்பட்டு சேரிங்கிராஸ் அப்பர் பஜார் வழியாக பேருந்து நிலைய சாலையை அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். இறுதியாக, காமராஜ் அணையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் விசர்ஜன நிகழ்ச்சியையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் ஏராளமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 3 நாள் வழிபாட்டிற்கு பிறகு இன்றும், நாளையும் என இருநாட்கள் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று முதற்கட்டமாக விசுவ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன நிகழ்ச்சி நடைபெற்றது.
100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பூங்கா சாலையில் இருந்து புறப்பட்டு சேரிங்கிராஸ் அப்பர் பஜார் வழியாக பேருந்து நிலைய சாலையை அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். இறுதியாக, காமராஜ் அணையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் விசர்ஜன நிகழ்ச்சியையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.