கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இயங்கி வரும் பசுமை அங்காடியை சென்னை சமூக நலத்துறை, கூட்டு இயக்குநர் டாக்டர்.ஷெரின் தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு, இயற்கையைப் பாதிக்காத தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இயங்கி வரும் பசுமை அங்காடியை சென்னை சமூக நலத்துறை, கூட்டு இயக்குநர் டாக்டர்.ஷெரின் தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு, இயற்கையைப் பாதிக்காத தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், மூங்கில் உருஞ்சிகள், காகிதப் பைகள், தண்ணீரில் கரையும் பைகள் என இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பல்வேறு வகையான பசுமை பொருட்கள் மாநகராட்சி பசுமை அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் மரக்கன்றுகள் வைக்கப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பருத்தியால் நெய்யப்பட்ட துணிப்பைகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பைப் பெற்றன.

இவற்றை பார்வையிட்ட சென்னை சமூக நலத்துறை, கூட்டு இயக்குநர் டாக்டர்.ஷெரின் மற்றும் கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், மாநிலத்தில் முதல்முறையாக பிளாஸ்டிக் கலப்பு இல்லாத பசுமை தயாரிப்புகளை ஊக்குவித்து வரும் கோவை மாநகராட்சியையும், பல்வேறு பசுமை பொருட்களை தயாரித்து வரும் குழுவினரையும் பாராட்டினர்.
மேலும், இயற்கையை பாதிக்காத காட்டன் பைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மகளிர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், மூங்கில் உருஞ்சிகள், காகிதப் பைகள், தண்ணீரில் கரையும் பைகள் என இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பல்வேறு வகையான பசுமை பொருட்கள் மாநகராட்சி பசுமை அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் மரக்கன்றுகள் வைக்கப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பருத்தியால் நெய்யப்பட்ட துணிப்பைகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பைப் பெற்றன.

இவற்றை பார்வையிட்ட சென்னை சமூக நலத்துறை, கூட்டு இயக்குநர் டாக்டர்.ஷெரின் மற்றும் கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், மாநிலத்தில் முதல்முறையாக பிளாஸ்டிக் கலப்பு இல்லாத பசுமை தயாரிப்புகளை ஊக்குவித்து வரும் கோவை மாநகராட்சியையும், பல்வேறு பசுமை பொருட்களை தயாரித்து வரும் குழுவினரையும் பாராட்டினர்.
மேலும், இயற்கையை பாதிக்காத காட்டன் பைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மகளிர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தனர்.