கோவை : பதவி கொடுக்கவில்லை எனில் யார் யாரைக் காட்டிக்கொடுப்பார் என்ற பயம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இருப்பதாக அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்த கேள்விக்கு தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை : பதவி கொடுக்கவில்லை எனில் யார் யாரைக் காட்டிக்கொடுப்பார் என்ற பயம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இருப்பதாக அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்த கேள்விக்கு தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பவில்லை என சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிப்போரில் இந்தியா உதவியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பேட்டி குறித்து தனக்கு தெரியாது. மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்கிறார். மற்றொரு அமைச்சர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் நிலைமையை பேசி அதன் பிறகு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பதவி கொடுக்கவில்லை எனில் யார் யாரை காட்டிக்கொடுப்பார் என்ற பயம்தான் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இருக்கிறது, என்றார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பவில்லை என சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிப்போரில் இந்தியா உதவியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பேட்டி குறித்து தனக்கு தெரியாது. மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்கிறார். மற்றொரு அமைச்சர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் நிலைமையை பேசி அதன் பிறகு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பதவி கொடுக்கவில்லை எனில் யார் யாரை காட்டிக்கொடுப்பார் என்ற பயம்தான் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இருக்கிறது, என்றார்.