கோவையில் முதற்கட்டமாக நாளை விநாயகர் விசர்ஜன ஊர்வலம் : மாநகரில் போக்குவரத்து மாற்றம்

கோவை: முதற்கட்டமாக நாளை நடைபெறும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: முதற்கட்டமாக நாளை நடைபெறும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் நாளை இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரத் சேனா, அனுமன் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து புறப்பட்டு பாலக்காடு சாலை வழியாக சென்று குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுகிறது. அதேபோல, சுமார் இரண்டு மணிக்கு போத்தனூர் சாரதாமில் சாலையில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்றுகூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி சாலையில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுகிறது. 

இதனால், பொதுமக்கள் நலன் கருதி கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவின் பேரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் முன்னிலையில் போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் இதர காவலர்கள் இணைந்து போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுவர். 

மேலும், விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை மதியம் முதலே கோவை மாநகருக்குள் லாரிகள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை 2 மணி முதல் உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் குறிச்சி பிரிவிலிருந்து, போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம், போத்தனூர் புதுப்பாலம்,ஜிடி டேங்க் என செட்டிபாளையம் சாலை வழியாக சென்று ஈச்சனாரி வழியாக பொள்ளாச்சி சாலை அடையலாம். 

அதேபோல, பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கோவைபுதூர் பிரிவில் இருந்து குளத்துப்பாளையம் வழியாக ஆசிரம்பள்ளி சந்திப்பு வந்து புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் வரலாம். மேலும், பொள்ளாச்சி சாலையில் இருந்து சுந்தராபுரம் வழியாக பாலக்காடு சாலை செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் பொள்ளாச்சி சாலை மகாலட்சுமி கோவிலில் சந்திப்பில் இடது பக்கம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் சாலையை அடைந்து, பின்னர் மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக வந்து பிள்ளையார்புரம் சந்திப்பில் இடது பக்கம் திரும்பி சுகுணாபுரம் வந்து பாலக்காடு சாலையில் அடையலாம். 

மேலும், பொள்ளாச்சி சாலையில் இருந்து சுந்தராபுரம் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி பிரிவிலிருந்து வலது பக்கம் திரும்பி ஈச்சனாரி செட்டிபாளையம் சாலையை அடைந்து, ஜிடி டேங்க், போத்தனூர் புதுப்பாலம் வழியாக போத்தனூர் கடைவீதி வந்து குறிச்சி பிரிவு வந்து ஆற்றுப் பாலம் வழியாக உக்கடம் செல்லலாம், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...