நீலகிரி: குன்னூர் மவுண்ட் ரோடு சின்னபள்ளி வாசல் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி த.மு.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி: குன்னூர் மவுண்ட் ரோடு சின்னபள்ளி வாசல் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி த.மு.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குன்னூரில் உள்ள சின்னபள்ளிவாசலுக்கு மிக அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தவரும் மதுப்பிரியர்களால் பக்தர்களும், இதன் அருகே உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் ஐதர் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கண்டன கோஷங்கள் எடுக்கப்பட்டன.
மேலும், சின்னப்பள்ளி வாசல் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஒரு வழித்தடத்தில் மதுகுடிப்பவர்கள் நின்று கொண்டு பல்வேறு தொந்தரவுகளை செய்து வருவதால் அந்த தடத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாகவும், விரைவில் மாவட்ட நிர்வாகம் இந்தக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கடையை தாங்களே அகற்றுவோம் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
குன்னூரில் உள்ள சின்னபள்ளிவாசலுக்கு மிக அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தவரும் மதுப்பிரியர்களால் பக்தர்களும், இதன் அருகே உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் ஐதர் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கண்டன கோஷங்கள் எடுக்கப்பட்டன.
மேலும், சின்னப்பள்ளி வாசல் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஒரு வழித்தடத்தில் மதுகுடிப்பவர்கள் நின்று கொண்டு பல்வேறு தொந்தரவுகளை செய்து வருவதால் அந்த தடத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாகவும், விரைவில் மாவட்ட நிர்வாகம் இந்தக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கடையை தாங்களே அகற்றுவோம் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.