திருப்பூர் : திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே ரூ. 43 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று திறந்து வைத்தார்.
திருப்பூர் : திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே ரூ. 43 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் திருப்பூரில் இருந்தவாறே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

புதிய பாலம் பற்றிய மீம்ஸ்கள் :
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வந்த பாலம் தொடக்கத்தில் ஒரு திட்டம் போடப்பட்டு, பின்பு நாளடைவில் வேறு மாதிரியான கோணத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் மக்கள் புதிய பாலத்தின் கட்டுமான வடிவமைப்பை விமர்சனம் செய்து பல்வேறு மீம்களை போட்டு விடுகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஆசியாவிலேயே பேருந்து நிலையத்திற்கு ஸ்பீடு பிரேக்கர் போட்ட தமிழக அரசு என சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.



இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் திருப்பூரில் இருந்தவாறே வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

புதிய பாலம் பற்றிய மீம்ஸ்கள் :
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வந்த பாலம் தொடக்கத்தில் ஒரு திட்டம் போடப்பட்டு, பின்பு நாளடைவில் வேறு மாதிரியான கோணத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் மக்கள் புதிய பாலத்தின் கட்டுமான வடிவமைப்பை விமர்சனம் செய்து பல்வேறு மீம்களை போட்டு விடுகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஆசியாவிலேயே பேருந்து நிலையத்திற்கு ஸ்பீடு பிரேக்கர் போட்ட தமிழக அரசு என சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

