விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தையொட்டி நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

நீலகிரி : விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் 900-க்கும் மேற்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


நீலகிரி : விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் 900-க்கும் மேற்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 



உதகையில் 15 மற்றும் 16-ம் தேதிகளில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது. எனவே, உதகை பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக முன்னதாகவே கண்டறியப்பட்டு, அதற்காக கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல்துறை முடிவெடுத்துள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் 912 போலீசார் ஒருங்கிணைத்து உதகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.



இந்த அணிவகுப்பு பழங்குடியினர் பண்பாட்டு மையம் பகுதியில் தொடங்கி சேரிங்கிராஸ், வர்த்தக சாலை, மார்க்கெட், மெயின் பஜார், மத்திய பேருந்து நிலையம் வழியாக காந்தல் பகுதியைச் சென்றடைந்தது. இந்தாண்டு மாவட்டம் முழுவதும் 562 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட விநாயகர் சிலைகள் அனைத்தும் நாளை அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானியாற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 



இதனை முன்னிட்டு இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேட்டுப்பாளையத்தின் நகர வீதிகள் வழியாக அதிரடிப்படை, அதிவிரைவுப்படை, கலவர தடுப்புப்படை மற்றும் உள்ளூர் போலீசார் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் டி.எஸ்.பி மணி தலைமையில் அணி வகுத்து சென்றனர். 

கூட்டத்தைக் கலைக்க பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை வீசும் வாகனம் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனம் போன்றவையும் இந்த போலீஸ் கொடி அணிவகுப்பில் பங்கேற்றன.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...