விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 1,892 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் சார்பில் 1,892 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் சார்பில் 1,892 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

விநாயகப் பெருமான் அவதரித்த தினத்தை விநாயகர் சதுர்த்தி விழாவாக நாடெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகளிலும், தெரு முனைகளிலும் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினால் பாவங்களை விநாயகப் பெருமான் ஏற்றுக்கொள்வதாகவும், பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதன் மூலம் பாவங்கள் தீரும் எனவும் நம்பப்படுகிறது.



இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகரில் 394 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளதன் பேரில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, அனுமன் சேனா, விவேகானந்தர் பேரவை என பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு காலை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பகுதியில் கோமாதா பூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. அதே பகுதியில் உள்ள மற்றொரு கோவிலில் பாற்கடலில் விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பது போல அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவை மாநகர் ரத்தினபுரி பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 9 அடி விநாயகர் சிலைக்கு 5 லட்சம் ரூபாயில் பண மாலையிட்டு பிரதிஷ்டை வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. 

மேலும், ராஜவீதி பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள 16 அடி உயர நவதானிய விநாயகர், ராஜ வீதியில் விவேகானந்தர் பேரவை சார்பில் ரசாயன கலப்படம் அற்ற அன்னபட்ஷி விநாயகர் சிலைகள் என கோவை மாவட்டத்தில் 1498 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை மறுதினம் மற்றும் வருகிற 17-ஆம் தேதி நீர்நிலைகளில் விஸர்ஜனம் செய்யப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே உயரமான கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள 19 அடி உயரம் கொண்ட 900 டன் எடையில் ஒரே கல்லால் ஆன முந்தி விநாயகர் சிலைக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, விநாயகருக்கு செய்யப்பட்ட சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் விநாயகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். இதேபோல, ஈச்சனாரி கோவிலில் விநாயகருக்கு தங்க காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் பல்வேறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள், விளக்கு பூஜை என பலஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...