சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளாவிடில் கொலை செய்து விடுவதாக பழங்குடியினத்தவர்களை மிரட்டும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோவை : தலை,கால் நகங்கள் எடுக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளுமாறு பழங்குடியின வாலிபர்களை அடித்து விஷ ஊசி போட்டு கொன்று விடுவதாக மிரட்டும் வனத்தல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆனைமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : தலை,கால் நகங்கள் எடுக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளுமாறு பழங்குடியின வாலிபர்களை அடித்து விஷ ஊசி போட்டு கொன்று விடுவதாக மிரட்டும் வனத்தல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆனைமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியிலுள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் பந்தக்காலம்மன் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகன் கனகராஜ் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த முருகன், குமார், அருண் என்பவர்களுடன் பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, இரண்டு ஜீப் மற்றும் வேனில் வந்த பொள்ளாச்சி வனச்சரகத்தை சேர்ந்த ரேஞ்சர் காசிலிங்கம், வனஅதிகாரி சரண்யா மற்றும் பிரபாகரன் முருகேஷ் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். 

வனத்துறையினர் பழங்குடியின வாலிபர்கள் நான்கு பேரையும் வேனில் ஏற்றி ஆழியாறு வனத்துறை சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நால்வரையும் கடுமையாக தாக்கி கடந்த வாரம் சிறுத்தையின் கால் நகம், தலையை எடுத்துவிட்டு, கொன்று காட்டுக்குள் வீசியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி வெள்ளை பேப்பரில் கையெழுத்து கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அவர்களை அடித்துவிட்டு, வனத்துறையினர் சிறுத்தை எப்படி இறந்து கிடந்ததோ, அதேபோல, கொன்று விடுவதாக மிரட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும், முருகன் என்பவருக்கு இடுப்பில் இரண்டு ஊசி போட்டுள்ளனர். உடனே அவர் மயக்கமடைந்துள்ளார். அதே போல அனைவரையும் கொன்று விடுவதாக வனத்துறையினர் அச்சுறுத்தி இருதய அறுவை சிகிச்சை செய்த கனகராஜை தாக்கியுள்ளனர். 

இந்த நிலையில், சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளுமாறு பழங்குடியின வாலிபர்களை அடித்து விஷ ஊசி போட்டு கொன்று விடுவதாக மிரட்டும் வனத்தல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மலைவாழ் மக்கள் ஆனைமலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், மலைவாழ் மக்களின் வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, ஆனைமலை காவல் ஆய்வாளரிடம் வனத்துறையினர் குறித்து புகராளித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...