திருப்பூரில் அ.தி.மு.க., பிரமுகரை கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது

திருப்பூர் : திருப்பூரில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் ஸ்ரீநகர் காட்டன் மில் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் திருப்பூர் மாநகராட்சியின் 28-வது வார்டு அ.தி.மு.க., இளைஞரணி செயலாளராக உள்ளார். உணவகம் நடத்தி வரும் இவர், அப்பகுதியில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் இளைஞர்களுக்கு கடன் கொடுத்து வசூல் செய்தும் வந்துள்ளார். மேலும், சிலரிடம் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

கடந்த திங்களன்று மதியம் அவரை கொங்கு மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த இளங்கோவை தொடர்ந்து வந்த இளைஞர்கள் மூன்று பேர் திருநீலகண்டபுரம் 2-வது வீதி அருகே வைத்து சரமாரியாக ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இளங்கோ, அதிகளவு ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த திருப்பூர் வடக்கு போலீசார், கொலை குற்றத்தில் ஈடுபட்ட செந்தமிழன், கோபி ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜே.எம்.,4-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான தாமோதரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...