நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ததது.
இதனால், பல ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பைக்காரா, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா மற்றும் அப்பர் பவானி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. அதேநேரம், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்து வருகிறது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ததது.
இதனால், பல ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பைக்காரா, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா மற்றும் அப்பர் பவானி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. அதேநேரம், வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்து வருகிறது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.