போதைப் பொருள் வழக்கு குற்றவாளியை ஜாமினில் எடுக்க போலியான ஆவணங்களை சமர்பித்தது கண்டுபிடிப்பு

கோவை: போதை பொருள் வழக்கில் கைதான முகமது சிஹாப் என்பவரை ஜாமீனில் எடுக்க போலி மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்ததை உறுதி செய்த நீதிபதி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கோவை: போதை பொருள் வழக்கில் கைதான முகமது சிஹாப் என்பவரை ஜாமீனில் எடுக்க போலி மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்ததை உறுதி செய்த நீதிபதி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ஜக்ரியா, தனியார் மருத்துவமனை மருத்துவர் ராமகிருஷ்ணன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உஷா, மன்சூர் உட்பட சிலர்

உதவியுடன் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளியை விடுவிக்க வலிப்பு நோய் இருப்பதாக போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேகமடைந்த நீதிபதி சான்றிதழ் குறித்த ஆய்வில் குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவர்கள் போலியான சான்றிதழ்களை அளித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, இவர்கள் மீது போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கோவை மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில் வழக்கினை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். 

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரிந்து கொண்டு குற்றத்திற்கு உடந்தையாக சட்ட விரோதப் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதை பயன்படுத்திக்கொண்டு பணத்திற்காக காட்டும் இடங்களில் எல்லாம் கையொப்பம் போட்டு தவறான வகையில் செயல்பட்டு வருகின்றனர். 

இப்படி குற்றங்களில் துணைநிற்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையும், இந்திய மருத்துவ கவுன்சிலும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எளிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...