புகைப்படங்களை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக காவலர் மீது புகார் : நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு

திருப்பூர் : தோழியுடன் சென்ற வாலிபரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி காவலர் மிரட்டுவதாக திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் : தோழியுடன் சென்ற வாலிபரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி காவலர் மிரட்டுவதாக திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கணபதியைச் சேர்ந்த பூபதி என்பவரின் மகன் பூபாலன். இவர் கடந்த சனிக்கிழமை தனது தோழியுடன் பெருமாநல்லூருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் சீருடையில் நின்று கொண்டிருந்த இருந்த 2 காவலர்கள் அவர்களை மடக்கியுள்ளனர். 



அப்போது, ஆவணங்களை சமர்ப்பித்த நிலையிலும், தகாத வார்த்தையில் அந்த ஜோடியை பேசியதுடன் பூபாலனை காவலர் பிரபு தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

மேலும், அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தனது செல்போனைப் பிடிங்கி, அதிலிருந்த புகைப்படங்களை காவலர் பிரபு ஏற்றிக் கொண்டதாகவும், ரூ. 10,000 அபராதம் செலுத்தாவிட்டால் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக பூபாலன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, 2 நாட்களுக்குப் பிறகு காவலர் பிரபு தனது வங்கிக் கணக்கை அனுப்பி, அதில் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், இதனை தர மறுத்த பூபாலன் திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தார். 

அதில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிடுங்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறிய பிரபு உள்பட 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...