கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கவுண்டம்பாளையம் - துடியலூர் சாலையோர மரங்களில் உள்ள இலைகளில் இந்து அமைப்பினர் அனுமதியின்றி காவி ரிப்பன்களை கட்டியுள்ளனர்.
கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கவுண்டம்பாளையம் - துடியலூர் சாலையோர மரங்களில் உள்ள இலைகளில் இந்து அமைப்பினர் அனுமதியின்றி காவி ரிப்பன்களை கட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து அமைப்புகளின் சார்பில் ஒவ்வொரு வீதிகளிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். மேலும், இந்து அமைப்புகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரபலங்கள் மற்றும் உறுப்பினர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் கொடிகளையும் கட்டி அமர்க்களப்படுத்துவர். இந்து மதத்தினர் தங்களது மத உணர்வுகளை வெளிப்படுத்தும் பண்டிகையாகக் கருதப்படும் இந்த விழாவில், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்பதற்காக பல்வேறு, கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இந்த நிலையில், கோவையில் கவுண்டம்பாளையம் - துடியலூர் சாலையில் அமைந்துள்ள ஐ.டி.ஐ., பகுதியில் இந்து அமைப்பினர் விதிகளை மீறி அத்துமீறி கொடிகளை கட்டியும், ரிப்பனையும் கட்டியுள்ளனர். அதாவது, சாலையோரத்தில் உள்ள மரங்களின் இலைகளில் காயப்படுத்தி காவி ரிப்பனை கட்டியுள்ளனர். இதனால், அந்த சாலை முழுவதும் காவிமயமாகக் காட்சியளிக்கிறது. அதோடு, சாலையின் நடுவின் உள்ள தடுப்புகளில் மாநகராட்சியிடமோ அல்லது போலீசிடமோ உரிய அனுமதி பெறாமல், காவி கொடிகள் மற்றும் பேனர்களை இந்து அமைப்பினர் நிறுத்தியுள்ளனர்.
அத்துமீறிய இந்த நடவடிக்கைகளை போலீசாரோ அல்லது பிற அதிகாரிகளோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.