கோவை : மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் திணித்து வரும் வேளையில், பெரியாரை மக்களிடம் அதிகளவில் எடுத்து செல்ல வேண்டுமென திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்தார்.
கோவை : மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் திணித்து வரும் வேளையில், பெரியாரை மக்களிடம் அதிகளவில் எடுத்து செல்ல வேண்டுமென திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்தார்.
கோவையில் நாய்வால் திரைப்பட இயக்கம் சார்பில் மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஓவியர் ஹசீப்கான், எழுத்தாளர் பசு.கவுதமன், அருவி பட இயக்குநர் அருண்பிரபு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் மணிவண்ணன் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது :- தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாழ்நாள் முழுக்க பாடுபட்டவர் பெரியார். மத்திய பா.ஜ.க., அரசு இல்லாவிட்டால், பெரியார் இளைஞர்களிடம் இவ்வளவு தூரம் சென்றிருக்க மாட்டார். மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை திணித்து வரும் வேளையில், பெரியாரை மக்களிடம் அதிகளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.
பீகாரில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஆர்.எஸ்.எஸ்., கொள்கையின்படி உடையணிய வேண்டுமென அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனை பீகாரிகள் எதிர்க்கிறார்களோ, இல்லையோ தமிழர்கள் கட்டாயம் எதிர்ப்பார்கள், எனக் கூறினார்.