தி.மு.க பலமடைய ஸ்டாலின்-அழகிரி இணைய வேண்டும்: கோவையில் ஆதீனம் அருணகிரிநாதர் நம்பிக்கை

கோவை: தி.மு.க பலம்பெற ஸ்டாலினும் அழகிரியும் இணைய வேண்டும் என்று கோவையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.


கோவை:  தி.மு.க பலம்பெற ஸ்டாலினும் அழகிரியும் இணைய வேண்டும் என்று கோவையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் தனியார் விடுதியில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "குட்கா ஊழலை பொருத்தவரை சி.பி.ஐ மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஊழல் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

எதிர்க்கட்சி என்ற முறையில் தி.மு.க தன்னுடைய கடமையை ஆற்றி வருகிறது. திமுக பலப்பட வேண்டுமென்றால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பா.ஜ.க.,வும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வும் நல்ல முறையில் வெற்றி பெறும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை ஆளுநர் நிச்சயம் விடுதலை செய்ய உத்தரவிடுவார். இதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். நித்தியானந்தா தரப்பிலிருந்து அச்சுறுத்தல் உள்ளது. ஆனால், அவர் மீண்டும் ஆதீனத்தில் நுழைய முடியாது. பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்து 30 ரூபாய்க்குக் கொண்டு வர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

சோபியா விமானத்தில் அப்படி நடந்திருக்கக் கூடாது. அதேசமயம் அந்த பெண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கக் கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல எல்லா நடிகர்களும் வர முடியாது. ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்களுக்கு பதிலாக, குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை முதலமைச்சர் அமைச்சராக்குவார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க முடியாது." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...