திருப்பூர்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் பாரத் பந்திற்கு வியாபாரிகள் சங்கம், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் மற்றும் வடக்கை கார்கள் இயங்கவில்லை.

இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மடத்துக்குளத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பியதுடன், திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலான கடைகள் அடிக்கப்பட்டதுடன், வாகனங்கள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி. கூடலூர் போன்றப் பகுதிகளில் ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள். லாரிகள், மினி பஸ்கள் இயங்கவில்லை.

அரசு பேருந்துகளில் ஆளும் கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தினர் தவிர மற்றவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டு காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் பாரத் பந்திற்கு வியாபாரிகள் சங்கம், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் மற்றும் வடக்கை கார்கள் இயங்கவில்லை.

இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மடத்துக்குளத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பியதுடன், திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலான கடைகள் அடிக்கப்பட்டதுடன், வாகனங்கள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி. கூடலூர் போன்றப் பகுதிகளில் ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள். லாரிகள், மினி பஸ்கள் இயங்கவில்லை.

அரசு பேருந்துகளில் ஆளும் கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தினர் தவிர மற்றவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டு காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.