கோவை: பள்ளிக்கல்வி துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் பெரிய உலக தலைவர் அல்ல எனவும், ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை: பள்ளிக்கல்வி துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் பெரிய உலக தலைவர் அல்ல எனவும், ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " தற்போதைய அரசு தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகிறது. தமிழகத்தின் அனைத்து துறைகளும் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தலா 20 லட்ச ரூபாய் மதிப்பில் அடுத்த மாதம் இறுதிக்குள் 60 அரசுப் பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்படும்.
மேலும், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் பெரிய உலக தலைவர் அல்ல. ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்." என்று அவர் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " தற்போதைய அரசு தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகிறது. தமிழகத்தின் அனைத்து துறைகளும் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தலா 20 லட்ச ரூபாய் மதிப்பில் அடுத்த மாதம் இறுதிக்குள் 60 அரசுப் பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்படும்.
மேலும், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் பெரிய உலக தலைவர் அல்ல. ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்." என்று அவர் கூறினார்.