கோவை: கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
செல்வபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நேரில் பார்வையிட்ட அவர், பள்ளிவளாகம் மற்றும் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

பின்னர், உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பெரியகுளத்தின் வடக்கு பகுதியில் அமையவிருக்கும் கட்டுமானங்கள் குறித்த வரைபடத்தை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
செல்வபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நேரில் பார்வையிட்ட அவர், பள்ளிவளாகம் மற்றும் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

பின்னர், உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பெரியகுளத்தின் வடக்கு பகுதியில் அமையவிருக்கும் கட்டுமானங்கள் குறித்த வரைபடத்தை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.