Exclusive: வசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு

கோவை: வசூல் குறைவு காரணமாக கோவை அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்த நடத்துனர் இல்லாப் பேருந்துகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கோவை: வசூல் குறைவு காரணமாக கோவை அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்த நடத்துனர் இல்லாப் பேருந்துகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

கோவை - மதுரை, கோவை - சேலம், கோவை - திருச்சி, கோவை - பொள்ளாச்சி, கோவை - மேட்டுப்பாளையம், கோவை - திருப்பூர், கோவை - சக்தி என இந்த வழித்தடங்களில் கோவை மண்டலத்தில் 47 பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோடு - கோவை இடையே 'ஈரோ 100' என்கிற பெயரில் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், சேலம், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பேருந்துகளின் இருக்கைகளில் முழுவதுமாக நிரம்பி விடுகின்றன. ஆனால், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் வழித்தடங்களில் பயண இருக்கைகள் முழுவதுமாக நிரம்புவதில்லை. இதனால், வசூல் மிகவும் குறைவாக உள்ளது. 

இதன் காரணமாக இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த நடத்துனர் இல்லா பேருந்துகள் பாதிக்குப் பாதி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கோவை சார்பில் பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 47 நடத்துனர் இல்லா பேருந்துகளில், தற்போது 22 பேருந்துகள் குறைக்கப்பட்டு 25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கோவை போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை - மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், சக்தி பகுதிகளுக்கு நடத்துனர் இல்லா பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளன. 54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் காலை, மாலை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குறைவான பயணிகள் மட்டுமே பெரும்பாலும் பயணிக்கின்றனர். 

இதனால், இந்த வழித்தடங்களில் நடத்துனர் இல்லா பேருந்துகளை குறைத்துள்ளோம். அதே சமயம், இதே வழித்தடங்கங்களில் நடத்துனருடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன," என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...