கோவை : திருமணம் நிச்சயம் செய்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததைப் பெற்றோர் கண்டித்ததால், வாலிபர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : திருமணம் நிச்சயம் செய்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததைப் பெற்றோர் கண்டித்ததால், வாலிபர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் அர்ஜூன் (27). வேலை எதுவும் கிடைக்காமல் இருந்த அர்ஜூனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, பெண் பார்த்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் அடிக்கடி பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரியவர திருமணத்திற்கு முன்பு பெண் வீட்டிற்கு சென்று வருவதை தவிர்க்குமாறு அர்ஜூனை கண்டித்து உள்ளனர். இதனால், மனமுடைந்த அர்ஜுனன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையறிந்த, பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அர்ஜூன் உயிரிழந்தார். இது குறித்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் அர்ஜூன் (27). வேலை எதுவும் கிடைக்காமல் இருந்த அர்ஜூனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, பெண் பார்த்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் அடிக்கடி பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரியவர திருமணத்திற்கு முன்பு பெண் வீட்டிற்கு சென்று வருவதை தவிர்க்குமாறு அர்ஜூனை கண்டித்து உள்ளனர். இதனால், மனமுடைந்த அர்ஜுனன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையறிந்த, பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அர்ஜூன் உயிரிழந்தார். இது குறித்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.