கோவையில் உயர்மின் அழுத்த கம்பியை பிடித்த கல்லூரி மாணவர் மரணம்

கோவை : கோவை மத்திய ரயில்நிலையம் அருகே கண்டெய்னர் லாரி மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை பிடித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை : கோவை மத்திய ரயில்நிலையம் அருகே கண்டெய்னர் லாரி மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை பிடித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரி. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் டி.சி.ஏ., முதலாம் ஆண்டு பயின்று வந்தார். பீளமேடு பகுதியில் தனியார் விடுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி படித்து வந்த ஸ்ரீஹரி. நேற்றிரவு நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது, இன்று அதிகாலை 3 மணியளவில் பீளமேடு ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னரின் மேல் ஏறியுள்ளார். 

இதனைக் கண்ட அவரது நண்பர்கள் அவரை கீழிறங்குமாறு வற்புறுத்தியும், அதனை அலட்சியப்படுத்திய ஸ்ரீஹரி 10,000 வோல்ட் உயர்மின் அழுத்த கம்பியை பிடித்துள்ளார். இதனால், உயர்அழுத்த மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே தூக்கி எறியப்பட்டு மரணமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், இது குறித்த ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...