திருப்பூர் : தமிழகத்தில் காலியாக உள்ள 854 கால்நடை மருத்துவ பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
திருப்பூர் : தமிழகத்தில் காலியாக உள்ள 854 கால்நடை மருத்துவ பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
உடுமலை அருகே உள்ள குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனது நிதியிலிருந்து 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, புதிய குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இதில், அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அரசு பள்ளிக்குள் சென்ற அமைச்சா் ராதாகிருஷ்ணன் பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார். அவா்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், ழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய அவர், கட்டிட வசதி இல்லாமல் இருப்பதை அறிந்து, புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்யும்படி உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தமிழகத்தில் காலியாக உள்ள 854 கால்நடை மருத்துவப் பணியிடங்களுக்கு, கால்நடை துறையில் பயின்றவர்கள் தேர்வு மூலமாக ஒரு மாதத்தில் பணி அமர்த்தப்பட இருக்கின்றனர். தகுதியானவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்," என்றார்.