கோவை: தேசிய அளவில் கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் கோவை மாவட்டத்தின் பங்கு முதன்மையானது என C4TN பாராட்டு நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் புகழாரம் சூட்டினார்.
கோவை: தேசிய அளவில் கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் கோவை மாவட்டத்தின் பங்கு முதன்மையானது என C4TN பாராட்டு நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் புகழாரம் சூட்டினார்.

கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கிய C4TN அமைப்பு மூலம் கேரள வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களை பாராட்டும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு, Cbe4Kerala குழுவில் இணைந்து உதவிய தன்னார்வ அமைப்புகளுக்கும், நன்கொடையாளர்களுக்கும் நினைவு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் பேசியதாவது :- வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கோவை மக்கள் ஒன்றிணைந்து உழைத்த அதே இடத்தில் பாராட்டு நிகழ்வு நடப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது. இதே குழு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும் மிக சிறப்பாக மீட்பு பணிகளை மேற்கொண்டது. வேறுபாடுகளை மறந்து மனிதநேயத்துடன் ஒன்று கூடிய மக்களையும், நிவாரணப் பொருட்களையும் மிக நேர்த்தியாக C4TN குழுவினர் ஒருங்கிணைத்து, கேரள மக்களுக்கு உதவினர்.

கேரள வெள்ளத்தின் போது பல்வேறு மாநில அதிகாரிகளும் ஒன்றிணைந்து மீட்பு பணிகள் குறித்த தகவல்களை பகிர்ந்து வந்தோம். அதில், அகில இந்திய அளவில் கேரளா மீட்பு பணிகளில் கோவை முதன்மையாக இருந்தது. இதே ஒருங்கிணைப்பாளர்களும், தன்னார்வலர்களும் இனிவரும் பேரிடர் சமயத்திலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.


கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கிய C4TN அமைப்பு மூலம் கேரள வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களை பாராட்டும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு, Cbe4Kerala குழுவில் இணைந்து உதவிய தன்னார்வ அமைப்புகளுக்கும், நன்கொடையாளர்களுக்கும் நினைவு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் பேசியதாவது :- வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கோவை மக்கள் ஒன்றிணைந்து உழைத்த அதே இடத்தில் பாராட்டு நிகழ்வு நடப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது. இதே குழு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும் மிக சிறப்பாக மீட்பு பணிகளை மேற்கொண்டது. வேறுபாடுகளை மறந்து மனிதநேயத்துடன் ஒன்று கூடிய மக்களையும், நிவாரணப் பொருட்களையும் மிக நேர்த்தியாக C4TN குழுவினர் ஒருங்கிணைத்து, கேரள மக்களுக்கு உதவினர்.

கேரள வெள்ளத்தின் போது பல்வேறு மாநில அதிகாரிகளும் ஒன்றிணைந்து மீட்பு பணிகள் குறித்த தகவல்களை பகிர்ந்து வந்தோம். அதில், அகில இந்திய அளவில் கேரளா மீட்பு பணிகளில் கோவை முதன்மையாக இருந்தது. இதே ஒருங்கிணைப்பாளர்களும், தன்னார்வலர்களும் இனிவரும் பேரிடர் சமயத்திலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.
