நீலகிரி: உதகை நகருக்குள் இரண்டு நாட்களாக சுற்றித்திருந்த காட்டெருமை சோர்வடைந்ததைத் தொடர்ந்து அதற்கு வனத்துறையினர் உணவு மற்றும் குடிநீர் வழங்கிய சம்பவம் அனைவரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீலகிரி: உதகை நகருக்குள் இரண்டு நாட்களாக சுற்றித்திருந்த காட்டெருமை சோர்வடைந்ததைத் தொடர்ந்து அதற்கு வனத்துறையினர் உணவு மற்றும் குடிநீர் வழங்கிய சம்பவம் அனைவரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உதகை கமர்சியல் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட நகரின் மிக முக்கியப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றித்திருந்த காட்டெருமை பொது மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், பகல் நேரம் என்பதாலும் அருகில் பள்ளிக்கூடம் இருப்பதாலும் அதனை விரட்டாமல் அதை அங்கேயே இருக்கும் படி பார்த்துக் கொண்டனர்.
14 மணி நேரத்திற்கும் மேலாக அங்கே இருந்த காட்டெருமை, இரவில் தாவரவியல் பூங்கா அருகில் உள்ள கோடப்மந்த் சோலைக்குள் விரட்டப்பட்டது. தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் சோர்வுடன் காணப்பட்ட இந்த காட்டெருமைக்கு உணவு மற்றும் தண்ணீரை வனத்துறையினர் பறிவுடன் வழங்கினர். வனத்துறையின் இந்த செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.