கோவை: திருநெல்வேலியிலிருந்து 4 மணி நேரத்தில் சாலை வழியாக கே.எம்.சி. ஹெச் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட கல்லீரல் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
கோவை: திருநெல்வேலியிலிருந்து 4 மணி நேரத்தில் சாலை வழியாக கே.எம்.சி. ஹெச் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட கல்லீரல் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
மூளைச்சாவடைந்த திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (16 ) என்பவரது கல்லீரல் திருநெல்வேலியிலிருந்து சாலை வழியாக கோவை கே.எம்.சி. ஹெச் மருத்துவமனைக்கு சுமார் 4 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
சாலை வழியாக உடல் உறுப்பினை கொண்டுவரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்ட காவல்துறையினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர்.
இதுகுறித்து, கோவை கே.எம்.சி. ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா. ஜி. பழனிசாமி கூறுகையில், திருநெல்வேலியிலிருந்து 4 மணி நேரத்தில் உறுப்பினை கொண்டு வருவது சாத்தியம் அல்ல. ஆனால், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் சீரிய ஏற்பாட்டால் இது சாத்தியமாகி உள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த அனைவர்க்கும், உடல் உறுப்புக்களைத் தானமாக தர முன்வந்த கோபிகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மூளைச்சாவடைந்த திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (16 ) என்பவரது கல்லீரல் திருநெல்வேலியிலிருந்து சாலை வழியாக கோவை கே.எம்.சி. ஹெச் மருத்துவமனைக்கு சுமார் 4 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
சாலை வழியாக உடல் உறுப்பினை கொண்டுவரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்ட காவல்துறையினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர்.
இதுகுறித்து, கோவை கே.எம்.சி. ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா. ஜி. பழனிசாமி கூறுகையில், திருநெல்வேலியிலிருந்து 4 மணி நேரத்தில் உறுப்பினை கொண்டு வருவது சாத்தியம் அல்ல. ஆனால், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் சீரிய ஏற்பாட்டால் இது சாத்தியமாகி உள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த அனைவர்க்கும், உடல் உறுப்புக்களைத் தானமாக தர முன்வந்த கோபிகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.