குட்கா முறைகேடு வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரனை பதவியில் இருந்து நீக்கக் கோரிக்கை

குட்கா முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



குட்கா முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா வீடுகள் உட்பட தமிழகத்தில் 35 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதனிடையே, தரகர்களாக செயல்பட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர், குட்கா வியாபாரி மாதவராவிடமிருந்து பணத்தை வாங்கி அதிகாரிகளிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தரகர்கள் 2 பேரையும் விசாரணைக்குப் பிறகு டெல்லி அழைத்துச் செல்லவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குட்கா ஊழல் தொடர்பாக இன்று மட்டும் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குட்கா ஊழல் தொடர்பாக சென்னை ராயபுரத்தில் காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இன்ஸ்பெக்டர் சம்பத் என்பவரின் வீட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

இந்த நிலையில்,  குட்கா முறைகேடு குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில், அவர் பதவியில் இருக்கும் போதே 2-வது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பதால் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல, டி.ஜி.பி., ராஜேந்திரனையும் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...