195 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நீலகிரி மாவட்ட ஆட்சியர்

நீலகிரி : நெலாக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் 195 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட்திவ்யா வழங்கினார்.

நீலகிரி : நெலாக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் 195 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட்திவ்யா வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது :- இந்த ஊராட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2017-2018 ஆம் ஆண்டில் ரூ. 75.60 லட்சம் மதிப்பில் 42 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 8 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ. 75.60 லட்சம் மதிப்பில் 58 பணிகள் நடைபெற்று வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டில் 14-வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ. 38.43 லட்சம் மதிப்பில் 22 பணிகள் எடுக்கப்பட்டு. அதில் 12 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 4 பணிகள் நடைபெற்று வருகிறது, இவ்வாறு கூறினார். 

தொடர்ந்து, இம்மக்கள் தொடர்பு முகாமில் 130 பழங்குடியின பயனாளிகளுக்கு சாதி சான்றிதழும், 8 பயனாளிகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் சிறுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 3,20,000-க்கான காசோலையினையும், 4 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளும், முதியோர், முதிர்கன்னி, விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை ஒரு பயனாளிக்கு மாதந்தோறும் தலா 1000 வீதம் 50 பயனாளிகளுக்கு ரூ.50,000 பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. 

2 பயனாளிகளுக்கு முன்னோடி வங்கி மூலம் சுயதொழில் தொடங்க ரூ.2,40,000-க்கான காசோலையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு இலவச சலவை பெட்டியினையும் ஆக மொத்தம் 195 பயனாளிகளுக்கு ரூ. 6,10,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம் மக்கள் தொடர்பு முகாமில் பொது மக்களிடமிருந்து 120 கோரிக்கை மனுக்களைப் பெற்று, துறை அலுவலர்களிடம் தகுதி இருப்பின் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...