அடியாட்களை வைத்து மிரட்டல்: நீலகிரியில் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம்

நீலகிரி: நீலகிரியில் அடியாட்களை வைத்து கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதாகக் கூறி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: நீலகிரியில் அடியாட்களை வைத்து கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதாகக் கூறி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கேத்தியில் சி.எஸ்.ஐ தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் செயலராக சார்லஸ் சாம்ராஜ் என்பவர் உள்ளார். கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு கடந்த நான்கு மாத ஊதியத்தையும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையையும் வழங்காத காரணத்தால், அதனை வழங்க வேண்டி சார்லஸ் சாம்ராஜிடம் கேட்டுள்ளனர்.

இதனால், அடையாளம் தெரியாத 40-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் கல்லூரிக்கு வந்த சார்லஸ் சாம்ராஜ், மாணவர்களிடமும், பேராசிரியர்களிடமும் வன்முறையைத் தூண்டும் விதமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து, செயலரைக் கண்டித்து கல்லூரி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி திடீர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றச்சாட்டுகளை முழுவதுமாய் மறுத்த நிர்வாகம் பின்னர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...