கோவை: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட வ.உ.சிதம்பரனார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு செக்கு இழுத்தார். அந்த செக்கு கோவை மத்திய சிறையில் நினைவு மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும் வ.உ.சி.,யின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களுக்கு மத்திய சிறை நிர்வாகத்தினர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் என பலர் வந்து மலர் தூவி மரியாதை செலுத்துவது வழக்கம்.

அதேபோல, இன்று வ.உ.சி.,யின் 146-வது பிறந்தநாளையொட்டி மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் சிறையில் அவர் இழுத்த செக்கிற்கும், அவரது உருவப்படத்திற்கும் பல்வேறு தரப்பினர் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் சிறைத்துறை நிர்வாகத்தினர் வ.உ.சி.,யின் பற்றாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.