ஏழை மாணவிகளுக்கு உதவுவேன் : கோவையில் சைலேந்திரபாபு உதவியில் படித்த மாணவி கண்ணீர் பேச்சு

கோவை: தேனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் மகளான ஸ்ரீஜா என்ற மாணவியை கோவை தனியார் கல்லூரியில் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு நன்கொடையாளர்கள் மூலம் பி.பார்ம் படிக்க வைத்ததையடுத்து, படிப்பை முடிக்க இருக்கும் நிலையில் மாணவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.ர்.


கோவை:   தேனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் மகளான ஸ்ரீஜா என்ற மாணவியை கோவை தனியார் கல்லூரியில் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு நன்கொடையாளர்கள் மூலம் பி.பார்ம் படிக்க வைத்ததையடுத்து, படிப்பை முடிக்க இருக்கும் நிலையில் மாணவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் இறுதியாண்டு படித்து வருகின்றார் ஸ்ரீஜா. அவருக்கு தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையும் உறுதியாகியுள்ளது. தனது 12-ம் வகுப்பில் 1118 மதிப்பெண்கள் எடுத்த ஸ்ரீஜா, அதற்கு மேல் படிக்க வழியில்லாமல் தவித்தார்.

மாணவியின் தாயார் புவனேஸ்வரி, தந்தை முருகேசன் ஆகியோர் கூலி வேலை செய்து வந்த நிலையில், மாணவியின் மேற்படிப்பிற்கு ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது, கோவையைச் சேர்ந்த சிலரின் உதவியால் படிக்க வைத்தார் ஏ.டி.ஜி.பி.



தற்போது மாணவி படிப்பை முடிக்கவுள்ள நிலையில் உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள விருந்தினர் அறையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட மாணவி ஸ்ரீஜா, வரும் காலத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு ஏழை மாணவர்களை படிக்கவைப்பதாக உறுதியளித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசுகையில், "இந்த மாணவியின் வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உதவி என்று வருபவர்களுக்கு உதவுவது நல்ல பண்பு. அதுவும் கல்விக்காக கொடுப்பது மிகச் சிறந்தது. இந்த காலத்தில் 100 பேரில் 8 பேர் தான் கல்லூரியில் சேர முடிகிறது. இதற்குக் காரணம் வசதியின்மை. ஆகவே முடிந்த வரை கல்விக்காக உதவி வரும் தலைமுறையினரை முன்னேற்ற உதவுவோம்." என்றார்.

மாணவி ஸ்ரீஜா பேசுகையில், "நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். ஆனால் படித்து முன்னேற வேண்டும் என்ற ஆசை அதிகம். அந்த நேரத்தில் தான் டிகிரி படிக்க சைலேந்திரபாபு சாரை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். அவரும் இன்று நான் டிகிரி முடிக்கும் வரை, கோவையில் உதவும் நல்ல உள்ளங்கள் மூலம் உதவினார். இப்படி உதவியில் படித்த நான் நல்ல நிலைமைக்கு விரைவில் வருவேன். அப்போது என்னைப் போல் உள்ள மாணவிகளுக்கு நான் உதவுவேன்." என்றார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...