வட்டமலைகரை ஓடை அணைப் பகுதியில் தீ விபத்து : 100 ஏக்கர் பரப்பிலான மரங்கள் சேதம்

திருப்பூர் : வெள்ளகோவில் அருகேயுள்ள வட்டமலைகரை ஓடை அணைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 100 ஏக்கர் பரப்பிலான தாவரங்கள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் : வெள்ளகோவில் அருகேயுள்ள வட்டமலைகரை ஓடை அணைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 100 ஏக்கர் பரப்பிலான தாவரங்கள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமடைந்தன. 

 

வெள்ளக்கோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை அணை அமைந்துள்ளது. பி.ஏ.பி., பாசன உபரி நீர் மூலம் நிரம்பும் வகையில், கடந்த 1980-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் மூலம் 6,060 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் வாய்க்கால்கள் உள்ளன. 

கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் வர வழிவகை செய்யாமல் வறண்டு கிடப்பதால் அணை முழுவதும் சீமை கருவேல மரங்கள், வேம்பு, வேலான் மரங்கள், பனைமரங்கள் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அதிகமான புதர்கள் உள்ள இந்தப் பகுதிகளில் முயல், மான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும், அருகில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் கால்நடை மேய்ச்சல் பகுதியாகவும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இன்று மதியம் அணைப் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதைக் கண்ட பொது மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணிநேரப் போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீவிபத்தினால், சுமார் 100 ஏக்கர் பரப்பிலான தாவரங்கள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வட்டமலைகரை ஓடை அணைப் பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்கள் மறைவான காட்டுப் பகுதிக்கு வந்து மது அருந்துவது வழக்கமாக நடந்து வருகிறது. அப்படி வந்தவர்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...