கோவை: சுங்கம் பைபாஸ் சாலையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றவரை பிடிக்க முயன்ற நபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: சுங்கம் பைபாஸ் சாலையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றவரை பிடிக்க முயன்ற நபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள சிவராம் நகரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று அதிகாலை உண்டியலை உடைத்து பணத்தை திருடியதாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கிடைக்க உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருடனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவிலின் அருகே கிருஷ்ணகுமார் என்பவர் திருடனை தேடிக்கொண்டிருந்த போது மறைந்திருந்த திருடன் கிருஷ்ணகுமாரை தோள் பட்டையில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் கிருஷ்ணகுமார் சத்தமிட அருகில் இருந்தவர்கள் திருடனை விரட்டிப் பிடித்தனர்.

பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த ருத்ரன் என்பதும், அவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ருத்ரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள சிவராம் நகரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று அதிகாலை உண்டியலை உடைத்து பணத்தை திருடியதாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கிடைக்க உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருடனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவிலின் அருகே கிருஷ்ணகுமார் என்பவர் திருடனை தேடிக்கொண்டிருந்த போது மறைந்திருந்த திருடன் கிருஷ்ணகுமாரை தோள் பட்டையில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் கிருஷ்ணகுமார் சத்தமிட அருகில் இருந்தவர்கள் திருடனை விரட்டிப் பிடித்தனர்.

பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த ருத்ரன் என்பதும், அவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ருத்ரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.