கோவையில் தனியார் பேருந்து மோதி இளம்பெண் பலி: பேருந்து உடைப்பு

கோவை: கணுவாய் அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தலை நசுங்கி பலியானார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கினர்.


கோவை: கணுவாய் அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தலை நசுங்கி பலியானார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கினர்.



கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி கோமதி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது கோவையில் இருந்து தடாகம் நோக்கி ஒரு தனியார் பேருந்து வந்துள்ளது. அதனை அருண்குமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அதிவேகமாக வந்த அப்பேருந்து கணுவாய் அருகே வந்தபோது முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோமதி மீது அதிவேகமாக மோதியது. இதில் நிலை நடுமாறி சாலையில் விழுந்த கோமதி மீது அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.



விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அருண்குமார் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, பேருந்தை கற்களை கொண்டு அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் பேருந்தை காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...