சொத்து அடமான பதிவுக் கட்டணத்தை குறைக்க கொசிமா வலியுறுத்தல்

கோவை : சொத்து அடமான பதிவுக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்

கோவை:  சொத்து அடமான பதிவுக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கொசிமா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசு திடீரென சொத்து அடமான பதிவுக் கட்டணத்தை (MOTD) ரூ. 25,000-ல் இருந்து ரூ. 30,000 ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே, அதனை ரூ. 10,000 ஆக மாற்றக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இப்போது எந்தவித காரணமும் இல்லாமல், ரூ. 30,000 ஆக உயர்த்தி இருப்பது சிறு, குறுந் தொழில்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, கொசிமா இந்தக் கட்டணத்தை ரூ. 10,000 என மாற்றி அமைக்கக் கோரிக்கை வைக்கிறது. இல்லையெனில், சிறு, குறுந் தொழில்களுக்கு உத்யோக் ஆதாரின் ஆதாரத்தைக் கொண்டு சலுகை அளிக்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...