தேச துரோக வழக்குகளை ரத்து செய்து திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் : கோவையில் மே 17 இயக்கத்தினர் பேட்டி

கோவை: திருமுருகன் காந்தி மீதான ஊபா, தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகளை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் வலியுறுத்தினார்.


கோவை: திருமுருகன் காந்தி மீதான ஊபா, தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகளை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் வலியுறுத்தினார். 

இது தொடர்பாக கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- குடிமகனின் அடிப்படை உரிமைகளைப் பறித்து நீண்ட நாட்கள் தடுப்பு காவலில் வைக்க, அரசின் தவறான கொள்கைகளை எதிர்க்கும் நபரை ஒடுக்குவதற்கு ஊபா சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையைக் கண்டித்து ஐ.நா.,வில் பேசியதற்காக ஊபா சட்டமும், பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தது, பொதுக்கூட்டங்களில் உரிய அனுமதி பெற்று பேசியதற்கும் 4 தேச துரோக வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் திருமுருகன் காந்தி மீது காவல்துறை பதிவு செய்துள்ளது. 

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தவறாக நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு ஏன் அரசு நஷ்ட ஈடு வழங்கவில்லை என ஐ.நா., நிபுணர் குழுவான வேலை குழு மத்திய, மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு அரசுகள் பதிலளிக்காமல் சர்வாதிகாரப் போக்கோடு செயல்படுகிறது. மேலும், திருமுருகன் காந்திக்கு எதிராகப் பாசிச அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் கைகோர்க்க வேண்டும். தமிழக மக்களை காக்கும் பணியில் மே 17 இயக்கம் தொடர்ந்து போராடும். அரசின் அடக்குமுறைகளுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை, இவ்வாறு அவர் கூறினார். 

இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் பேசுகையில்," திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்குகள் கண்டிக்கத்தக்கது. அதற்கு அனைத்து கட்சிகள் சேர்ந்து முடிவெடுத்து அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த இருக்கிறோம், என்றார். இந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ., தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல கட்சியினர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...