திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் பின்அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியுமாறு போலீசார் அறிவுரை

திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகன ஒட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர்.

திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகன ஒட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர். 

தமிழகத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த உயிர் இழப்புகளை தடுக்கும் விதமாக, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் அதன் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.



இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இன்று (ஆக.,25) முதல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும், தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைக் கொடுத்து போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர். 



இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறையின் உதவி ஆணையர் கஜேந்திரன், தெற்கு காவல் உதவி ஆணையர் தங்கவேல், போக்குவரத்து ஆய்வாளர் ஜானகிராமன், உதவி ஆய்வாளர்கள் பாண்டியராஜன், கதிரேசன் உள்பட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...