கோவையில் இருந்து கேரளாவிற்கு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பி வைப்பு

கோவை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்களை கோவையில் இருந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி., வேலுமணி ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

கோவை:  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்களை கோவையில் இருந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி., வேலுமணி ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு கரங்கள் நீட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. 



இதன் ஒரு பகுதியாக, கேரள மக்களுக்கு தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்களை தமிழக ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அனுப்பி வைத்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 11 லாரிகள் மூலம் குடிநீர் பாட்டிகளை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

முன்னதாக, மாவட்ட கூட்ட அரங்கில் 'மாசில்லா தமிழகம்' திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக, மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், "கேரள மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டவுடன் முதன்முதலில் அம்மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கினார். கோவை மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே 55 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அங்கு குடிதண்ணீர் அதிகம் தேவைப்படுவதால் போக்குவரத்துத் துறை சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஒரு லட்சம் அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ள நீரில் இருந்து சுத்தமான குடிநீர் சுத்திகரிக்கும் 4 லட்சம் மதிப்பிலான இயந்திரமும் அனுப்பப்பட இருக்கிறது. 

பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்," என்றார். 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...