ஆனைகட்டி அருகே யானை மீது தீப்பந்தங்கள் வீச்சு

கோவை: ஆனைகட்டி அருகே சுற்றித்திருந்த காட்டு யானை மீது டாஸ்மாக் பார் ஊழியர்கள் தீப்பந்தங்கள் மற்றும் கற்களை வீசும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை:  ஆனைகட்டி அருகே சுற்றித்திருந்த காட்டு யானை மீது டாஸ்மாக் பார் ஊழியர்கள் தீப்பந்தங்கள் மற்றும் கற்களை வீசும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு சுமார் 10:30 மணியளவில் ஆனைகட்டியை அடுத்த ஜம்புக்கரை பகுதியில் காட்டு யானை ஒன்று வலம் வந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த டாஸ்மாக் பார் ஊழியர்கள் யானை மீது கற்களை வீசியும், தீப்பந்தங்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் வன உயிரினங்கள் ஆர்வலர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று கடந்த மாதம் அனுவாவி சுப்ரமணியர் கோவில் அருகே சின்னத்தம்பி என்ற யானை மீது ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் செய்தி ஒன்று வெளியானது. அப்போது, யானைகள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களை வனத்துறையினர் எச்சரித்தனர்.

ஆனால், தற்போது யானை மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...