திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலைகளிலிருந்து வெளி வரும் உப்பு கழிவினை மீண்டும் பயன்படுத்தும் வகையில், சுத்திகரிப்பு முறையை அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலைகளிலிருந்து வெளி வரும் உப்பு கழிவினை மீண்டும் பயன்படுத்தும் வகையில், சுத்திகரிப்பு முறையை அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரில் உப்பைப் பிரித்தெடுத்த பிறகு, எஞ்சிய கழிவு உப்பில் உள்ள சோடியம் சல்பேட் மற்றும் சோடியம் குளோரைடு உப்புக்களை தனித்தனியாக பிரித்தடுத்து மறு உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, குப்பாண்டம்பாளையத்தில் உள்ள சின்னக்கரை பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சார்பில், ‘உப்புக்கழிவு அற்ற சுத்திகரிப்பு முறை’ திட்டம் முதன் முறையாக திருப்பூரில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன், கைத்தறித்துறை அமைச்சர் மணியன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சின்னக்கரை பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் மேலாண்மை இயக்குநர் சண்முக சுந்தரம், திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இதுவரை சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் இறுதியாகும், சோடியம் சல்பைட் ஆகியவை சந்தைகளில் விற்க முடியாமல் கிடந்தன. இதனை தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் சோடியம் சல்பைடு மற்றும் சோடியம் குளோரைடாக இரண்டாக பிரித்து எடுக்க முடிகிறது. இதனைப் பிரித்தெடுக்க 18 பைசா செலவாகிறது. ஆனால், அதில் 15 பைசா நமக்கு திருப்பி கிடைத்து விடுகிறது. 3 பைசா மட்டுமே செலவாகிறது.

எனவே, இங்கு குவிந்து கிடக்கும் உப்பை, சந்தையில் விற்பனை செய்யும் போது இடம் சுத்தமாகிறது. மாசு இல்லாத சூழல் உருவாகிறது. இதன்மூலம், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து சாயக்கழிவு ஆலைகளில் இருந்தும் கழிவுகள் பெறப்பட்டு சுத்திகரிக்க முடியும். திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் பணிகள் எந்த குறையும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் அனைத்துக் கடைமடை பகுதிகளுக்கும் சென்றுவிட்டது. காவிரி திறப்பிற்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் மழை இல்லை. இதுவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாக உள்ளது, என்றார்

சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரில் உப்பைப் பிரித்தெடுத்த பிறகு, எஞ்சிய கழிவு உப்பில் உள்ள சோடியம் சல்பேட் மற்றும் சோடியம் குளோரைடு உப்புக்களை தனித்தனியாக பிரித்தடுத்து மறு உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, குப்பாண்டம்பாளையத்தில் உள்ள சின்னக்கரை பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சார்பில், ‘உப்புக்கழிவு அற்ற சுத்திகரிப்பு முறை’ திட்டம் முதன் முறையாக திருப்பூரில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன், கைத்தறித்துறை அமைச்சர் மணியன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சின்னக்கரை பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் மேலாண்மை இயக்குநர் சண்முக சுந்தரம், திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இதுவரை சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் இறுதியாகும், சோடியம் சல்பைட் ஆகியவை சந்தைகளில் விற்க முடியாமல் கிடந்தன. இதனை தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் சோடியம் சல்பைடு மற்றும் சோடியம் குளோரைடாக இரண்டாக பிரித்து எடுக்க முடிகிறது. இதனைப் பிரித்தெடுக்க 18 பைசா செலவாகிறது. ஆனால், அதில் 15 பைசா நமக்கு திருப்பி கிடைத்து விடுகிறது. 3 பைசா மட்டுமே செலவாகிறது.

எனவே, இங்கு குவிந்து கிடக்கும் உப்பை, சந்தையில் விற்பனை செய்யும் போது இடம் சுத்தமாகிறது. மாசு இல்லாத சூழல் உருவாகிறது. இதன்மூலம், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து சாயக்கழிவு ஆலைகளில் இருந்தும் கழிவுகள் பெறப்பட்டு சுத்திகரிக்க முடியும். திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் பணிகள் எந்த குறையும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் அனைத்துக் கடைமடை பகுதிகளுக்கும் சென்றுவிட்டது. காவிரி திறப்பிற்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் மழை இல்லை. இதுவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாக உள்ளது, என்றார்