உதகை உணவக உரிமையாளர்கள் சார்பில் கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

நீலகிரி : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதகையிலிருந்து உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

நீலகிரி : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதகையிலிருந்து உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதிதீவிர தென்மேற்கு பருவமழையால் சுமார் 13 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. வீடுகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகள் என அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்கள் அனைவரும் அடிப்படை மற்றும் அத்தியாவசிய பொருட்களின்றி தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலிருந்து பல்வேறு நிவாரணப் பொருட்களும், நிவாரண நிதியும் பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு நிறுவனங்கள் சார்பிலும் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி முதல் இன்று வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பொருட்களையும், நிதியையும் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உதகையில் இன்று உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வர்க்கி, பிஸ்கட், தண்ணீர், முறுக்கு, ரஸ்க் என ஒரு நபருக்கு 150 வீதம் சுமார் 2,500 பேருக்கு மொத்தம் ரூ. 4 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்களை கேரள மாநிலம் மலப்புரம் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த உணவுப் பொருட்களை அந்த மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதாக உதகை உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...