கேரளாவுக்கு ரூ. 13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பியது கோவை மாநகராட்சி

கோவை: கோவை மக்களின் உதவியோடு கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் இதுவரை ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மக்களின் உதவியோடு கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் இதுவரை ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



கடந்த வாரம் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக அணைகள் நிறைந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி 350-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு உதவுவதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்களும், நிதி உதவியும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மாநகராட்சி

கோவை மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரளாவிற்கு நிவாரணப் பொருட்களை பெற்று வழங்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேகரித்து வழங்கிய நிவாரணப் பொருட்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாநகராட்சி சார்பில் கேரளாவின் பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றது.



கடந்த 15-ம் தேதி முதல், நேற்று வரை சுமார் ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் கூறுகையில், "கோவையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் பெறப்பட்ட நிவாரணப் பொருட்கள் கேரளாவில் உள்ள நிவாரண முகாம்களுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

மாநகராட்சி அலுவலகத்திற்கு பொருட்களை எடுத்து வர இயலாதவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதவி செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் பொருட்களை வழங்கியதற்கான ரசீதுகள் பெறப்படுகின்றன. 



டூத் ப்ரஷ், சோப்பு, ஆடை வகைகள் மற்றும் காலனிகள் போன்ற நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அடுத்தடுத்த நாட்களில் அவை அனைத்தும் கேரளாவில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளது." என்றார்.

கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதால் படிப்படியாக மக்கள் தங்களின் இடத்தில் குடியமர்ந்து வருகின்றனர். வெள்ள நீரில் வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டதால், சமையல் பாத்திரம், அடுப்பு, போர்வை, காலனி போன்ற பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.

உதவி செய்ய விரும்புவோர் நிவாரணப் பொருட்களை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வழங்கலாம் அல்லது 0422- 2395156, 2302323, 2390261 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...