நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அக்கார்டு நிறுவனத்துக்கு சொந்தமான விடுதிகளுக்கு 48 மணிநேரத்தில் சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அக்கார்டு நிறுவனத்துக்கு சொந்தமான விடுதிகளுக்கு 48 மணிநேரத்தில் சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடலூர் அருகே தேவாலா கிராமத்தில் 180 ஏக்கரை அக்கார்டு எனும் நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட வருவாய் அதிகாரி அறிவிப்பாணை வெளியிட்டார். இதனை ரத்து செய்யக் கோரி, அக்கார்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், 48 மணிநேரத்தில் அந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள நிரந்தர கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஆணையிட்டார்.
மேலும், பழங்குடியினர் வசிக்கும் வனப்பகுதியில் ரிசார்ட் போன்ற வர்த்தக கட்டுமானங்கள் கட்டப்பட்டது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டார். அதேபோல, காலியிடத்தை 2 நாட்களில் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென அக்கார்டு நிறுவனத்திற்கு ஆணையிட்ட நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.