சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை : குளமாக மாறிய திருப்பூர் சாலைகள்

திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். 



திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளான திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலையில் சாரலாக மழை பெய்யத் தொடங்கியது. பின்னர், கனமழையாக வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர், நீச்சல் குளம் போலத் தேங்கியது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 



இதுகுறித்து பொதுமக்கள் கூறும்பொழுது :- மழை பெய்ய ஆரம்பித்தாலே திருப்பூரிலுள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்க ஆரம்பித்து விடுகிறது. மழைநீருடன் கலந்து சாக்கடை நீரும் செல்வதால், மழைக்காலங்களில் சாலையில் செல்வதே மிகுந்த சிரமத்திற்குள்ளானதாக அமைந்து விடுகிறது. எனவே. சாலைகளில் தேங்கும் மழைநீரை முறையாக சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...