அ.தி.மு.க., செயற்குழுவில் வாஜ்பாய், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, வாஜ்பாய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, வாஜ்பாய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சரமான எடப்பாடி  பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தி.மு.க., தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் மறைவுக்கும், கேரள, கர்நாடக வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 



காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதற்கு தமிழக அரசிற்கும், உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்திய நிர்வாகிகளுக்குப் பாராட்டு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஈ.வே.ரா., அண்ணாதுரை, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...