தமிழக காங்கிரஸ் செயலாளராக சஞ்சய் தத் நியமனம்

தமிழக அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய செயலாளராக சஞ்சய் தத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய செயலாளராக சஞ்சய் தத் நியமிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தமிழகம் உள்பட 9 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டியின் புதிய செயலாளர்களை அவர் நியமித்துள்ளார். தமிழக காங்கிரஸ் செயலாளராக சஞ்சய் தத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மகாராஷ்டிரா சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல, ஜம்மு காஷ்மீரின் செயலாளராக ஷகீல் அகமதுகான், உத்தராண்ட் செயலாளராக ராஜேஷ் தமனி, பி.பி., சிங், முகமது மொஹைத், சரத் ராவுத் ஆகியோர் மேற்கு வங்கத்தின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு காங்கிரசில் இணைந்த பின்தங்கிய வகுப்பினரின் தலைவர் அல்பேஷ் தாகூர் பீகார் செயலாளராகவும், சல்லா வம்ஷி சந்த் ரெட்டி மற்றும் பி.எம். சந்தீப் ஆகியோர் மகாராஷ்டிராவிற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அனைத்து இந்தியா மகிளா காங்கிரஸ் தலைவராக ரேபரேலி எம்.எல்.ஏ., அதிதி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...