இயல்பு நிலைக்கு திரும்பிய வால்பாறை : 95 சதவீத பேருந்துகள் இயக்கம்

கோவை: தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வால்பாறையில் வாழும் மக்களின் வாழ்க்கை இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது.

கோவை: தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வால்பாறையில் வாழும் மக்களின் வாழ்க்கை இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது. 



வால்பாறை பகுதியில் கடந்த 10 தினங்களாக கனமழை பெய்த வந்த நிலையில், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் குளம் போல தேங்கியது. குறிப்பாக, வால்பாறை அரசுப் பேருந்து பணிமனையை வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும், நிலச்சரிவு காரணமாக சாலைகளும் துண்டிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 



இந்த நிலையில், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை குறையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை தொடர ஆரம்பித்துள்ளனர். மேலும், சாலைகளில் வெள்ளநீர் வடிந்ததால், வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குப் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. மண் சரிவு காரணமாக ஓரிரு பகுதிகளுக்கும் மட்டும் பேருந்து இயக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால், 95 சதவீதம் பேருந்துகளே இயக்கப்பட்டன. மேலும், வால்பாறையில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 85 சதவீதம் மாணவ, மாணவிகள் வருகை தந்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...