பள்ளிக்கூடச் சுவரை கழிப்பிடமாக பயன்படுத்தும் பொதுமக்கள்: 30 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம்

கோவை: கடந்த 30 ஆண்டுகளாக வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை, கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தொடர் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.


கோவை: கடந்த 30 ஆண்டுகளாக வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை, கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தொடர் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. 

வீரசாமி முதலியார் தெருவில் 1854-ம் ஆண்டு முதல் வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்த வண்ணமே இருந்து வருகிறது. 

இதற்கு முக்கியக் காரணம், பள்ளியின் சுற்றுப்புறச் சுவரை பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுநீர் கழிக்கும் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டினாலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றுவதோ அல்லது இந்தப் பள்ளியில் குழந்தைகளை தேர்வு சேர்ப்பதற்கு தயக்கம் காட்டி வரும் சம்பவங்கள் நடக்கின்றன.



"கோவை மாநரகாட்சியால் உருவாக்கப்பட்ட கழிப்பறை போன்ற தோற்றமே, பள்ளியின் சுற்றுப்புறச் சுவரை பொதுமக்கள் தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர்," எனக் கூறுகிறார் பள்ளியின் ஆசிரியர்.

பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில்,"பள்ளியின் சுற்றுப்புறச் சுவரை நாள்தோறும் மாநகராட்சி ஊழியர்களின் மூலம் நாள்தோறும் தூய்மை செய்து வருகிறோம். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்சனை இருந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை தொடரும் பட்சத்தில், சுவர்களில் சுவர்களில் எழுதியோ அல்லது கடவுள் உள்ளிட்ட படங்களை ஒட்டி வைக்கவோ முடிவு செய்துள்ளோம்," என்றார்.

பள்ளி வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் மறைவை பயன்படுத்தி, பொதுமக்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...